உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கிளவுட் பர்ஸ்ட் எனப்படும் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர்காசி அருகே மோரி தெஹ்சில் பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் இறந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை செயலர் முருகேசன் அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.