சென்னை: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடந்த விபத்தில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் முதல்வர் பழனிசாமி அளித்தார். விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என கூறினார். விபத்தில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். நேற்று துறையூர் அருகே கோயிலுக்கு நேர்த்திக் கடனுக்காக சென்றபோது, லோடு ஆட்டோ டயர் வெடித்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த ஆட்டோ எரகுடி அருகே மதியம் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவின் முன்பக்க டயர் திடீரென வெடித்து தாறுமாறாக சென்றது.டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரம் இருந்த 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது.