சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: மூர்மார்க்கெட்டில் இருந்து நாளை, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் எளாவூர் - சூலூர்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டு மூர்மார்க்கெட்- எளாவூர் வரை இயக்கப்படும். அதேப்போல், மறுமார்க்கத்தில் சூலூர்பேட்டையில் இருந்து நாளை, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் சூலூர்பேட்டை- எளாவூர் இடையே ரத்து செய்யப்பட்டு எளாவூர்- மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும். மேலும், சேலம்- எழும்பூர் இடையே சேலத்தில் இருந்து இன்று இரவு 9.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.