அத்திவரதர் தரிசனம் நாளை மட்டும் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும் : காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு

காஞ்சிபுரம் : அத்திவரதர் தரிசனம் நாளை மட்டும் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். நாளை வரதராஜப் பெருமாளுக்கு கருடசேவை என்பதால் மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும் என்றும் இறுதிநாளான 16ம் தேதி காலை 5 மணி முதல் மீண்டும் தரிசனம் தொடங்கும் என்றும் அவர் கூறினார். 16ம் தேதி வரும் பக்தர்கள் அனைவரும் தரிசித்த பின்பே அத்திவரதர் வைபவம் முழுமையாக நிறைவுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: