சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த பாத்திமா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டதாவது: விவசாய நிலத்தில் அபாயகரமான கழிவுகளை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எதிர்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் வழக்கு தொடர முழு உரிமை உள்ளது. இந்தியாவில் அபாயகரமான மாசுபாட்டை ஏற்படுத்தும் 17 நிறுவனங்களில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. ஆலையை எதிர்த்தார்கள் என்பதற்காக 13 அப்பாவி பொதுமக்கள் தங்கள் வாழ்வை இழந்துள்ளனர். அவர்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.