மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்தது. தங்களுக்கு போட்டியாக செயல்படும் எதிர்தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவர்களை கொன்று சாலையோரத்தில் உடல்கள் குவிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. தற்போது, இதுபோன்ற சம்பவம் மெக்சிகோவின் மிக்கோகன் மாநிலத்தின் உருவாபன் என்ற நகரில் நடந்துள்ளது. இங்குள்ள பாலத்தில் 9 பேரின் சடலங்கள் கட்டித் தொங்க விடப்பட்டு இருந்தன. இதன் அருகே, சாலையோரத்தில் 10 பேரின் உடல்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.