திருவனந்தபுரம் : நாட்டிலேயே முதல்முறையாக இஸ்ரோவுடன் இணைந்து, திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றிய, இஸ்ரோ-வின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி.,) உள்ளது. இந்நிலையில், வி.எஸ்.எஸ்.சி., நிதியுதவியுடன் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இருப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, திருவனந்தபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் (நாலேட்ஜ் சிட்டி) அமைக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், 20 ஏக்கரில் நாட்டிலேயே முதல்முறையாக விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.