சென்னை-கூடூர் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

சென்னை: சென்னை-கூடூர் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை-கூடூர் வழித்தடத்தில் நாளை (ஜூலை 22) பராமரிப்புப்பணி நடக்கிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 8 மணிக்கு நெல்லூருக்கு புறப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து சில்சாருக்கு செல்லும் ரயில் எளாவூரில் இருந்து 150 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் ரயில் தடாவில் இருந்து 150 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். சென்ட்ரல் - விஜயவாடா ரயில் கூடூரிலிருந்து 60 நிமிடம் தாமதமாக செல்லும். சென்ட்ரல்-ஹவுரா கோரமண்டல் சூலூர்பேட்டையிலிருந்து 20 நிமிடம் தாமதமாக புறப்படும். சூலூர்பேட்டையிலிருந்து நெல்லூர் செல்லும் ரயில் 20 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: