சென்னை: 7 தமிழர்கள் மற்றும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று, ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், தமிழக ஆளுநர் 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார்.