சென்னை: சட்டப் பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆத்தூர் ஐ.பெரியசாமி (திமுக) பேசியதாவது: திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ஒவ்வொரு முறையும் முதல்வராக இருந்த போது குழு அமை த்து காவலர் நலன்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தார். ஆனால் இன்றைய ஆட்சியில் கூடுதல் நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு வெறும் ரூ.200 மட்டுமே வழங்குகிறது. வாரத்தில் ஒரு நாள் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும், ஐபிஎஸ் முடித்து வருபவர்களுக்கு பதவி உயர்வு வேகமாக கிடைக்கிறது. ஆனால் குரூப் 1 முடித்து காவல் துறையில் சேருபவர்களுக்கு பதவி உயர்வு சுணக்கம் ஏற்படுகிறது. . முதல்வர் எடப்பாடி பழனிசாமி: 1980ம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் தொடங்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சியில் 1989ல் அது நிறுத்தப்பட்டது. பின்பு 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மீண்டும் தொடங்கப்பட்டது. அதேபோன்று சிலை கடத்தல் பிரிவு 1983ம் ஆண்டு துவங்கப்பட்டது.