ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி, அரக்கோணம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு காலை 10.40 மணிக்கும், திருத்தணிக்கு காலை 11 மணிக்கும், மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 1.05 மணிக்கு அரக்கோணத்திற்கும், பிற்பகல் 1.20 மணிக்கு திருத்தணிக்கும், மூர்மார்க்கெட்டில் இருந்து பிற்பகல் 12.50 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்திற்கு பிற்பகல் 2.50 மணிக்கும், திருத்தணிக்கு மாலை 3.10 மணிக்கும் சென்றடையும்.

அதேபோன்று திருத்தணியில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 11.50 மணிக்கு அரக்கோணத்திற்கும், மூர்மார்க்கெட்டுக்கு பிற்பகல் 1.50 மணிக்கும், திருத்தணியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்திற்கு பிற்பகல் 1.50 மணிக்கும், மூர்மார்க்கெட்டுக்கு மாலை 3.45 மணிக்கும், திருத்தணியில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்திற்கு மாலை 3.40 மணிக்கும், மூர்மார்க்கெட்டுக்கு மாலை 5.40 மணிக்கு வந்தடையும்.

மேலும் சென்ட்ரல்-அகமதாபாத் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 மற்றும் செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத்துக்கு திங்கள்கிழமை காலை 5.45 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: