வேன் மோதி சிறுமி பரிதாப பலி

தாம்பரம்: தாம்பரம் பொழிச்சலூர், மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மனைவி புவனேஸ்வரி (30). இவர்களுக்கு ஆத்மீக்கா (8) என்ற மகள் உள்ளார். சிறுமி அதேப் பகுதி பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறாள். நேற்று புவனேஸ்வரி மகள் ஆத்மீக்காவுடன் குரோம்பேட்டை வணிக வளாகத்திற்கு சென்றார். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றபோது சிக்னலை மதிக்காமல் வந்த மினி வேன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி பலியானாள்.  இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.

Related Stories: