சென்னை: எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக வழக்கு பதியக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அசோக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். எஸ்.எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடியை மாணவர்களுக்கு வழங்காமல் முறைகேடு நடந்ததாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. 19 மாவட்டங்களில் உள்ள 67 கல்லூரிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிய வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.