சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் உடற்கூராய்வு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, ராஜகோபாலின் உடல் பதப்படுத்துவதற்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் ராஜகோபாலின் சொந்த ஊருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.