திருமலை: சென்னையில் இருந்து குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. இந்த ரயில் நள்ளிரவு 12 மணியளவில் தெலங்கானா மாநிலம், கம்மம் ரயில் நிலையம் அருகே வந்தது. அப்போது, ரயிலில் பயணித்த சிறுவர், சிறுமிகளை கொத்தடிமைகளாக்க சிலர் அழைத்து செல்வதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்மம் ரயில்வே பாதுகாப்பு படை, மாநில ரயில்வே போலீசார், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கம்மம் ரயில் நிலையத்திற்கு வந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர்.அப்போது, பொதுப்பெட்டியில் 16 சிறுவர்கள், 12 சிறுமிகள் உட்பட 55 பேர் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சிறுவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காமல் அச்சத்துடன் இருந்தனர். பெரியவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.