சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுவதாவது; தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது . தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.