அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுவதாவது; தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது . தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலத்தில் 4 சென்டிமீட்டரும், திருவாரூர், அதிராமப்பட்டினத்தில் 3 சென்டிமீட்டரும், வல்லம், மதுக்கூரில் 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும். மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரில்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: