சென்னை: தேசிய கல்விக்கொள்கை வரைவினை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பகவத்சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக ஜூலை 31 வரை மக்கள் கருத்து பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.