அரசு பள்ளி ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழை புறக்கணித்து இந்தி சேர்ப்பு: ஆசிரியர்கள் அதிர்ச்சி

தருமபுரி: தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழை புறக்கணித்து இந்தி சேர்க்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களின் வருகை பதிவை கண்காணிக்க விரல் நேரகை வருகை பதிவு (பயோமெட்ரிக்) முறை கடைபிடிக்கப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் சோதனை முயற்சியாக ஆசியர்களுககு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஜூன் மாதம் முதல், அதாவது இந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆசியர்கள் காலையில் பள்ளிக்கு வந்த உடனேயே தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பபட்டு இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்து தங்களது வருகை நேரத்தை உறுதி செய்வார்கள். இது அன்றாடம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த நேரத்தை அந்த எந்திரம் பதிவு செய்துவிடும். இந்த நிலையில், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஆசிரியர் வருகை பயோமெட்ரிக் கருவியில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம்பெற்றுள்ளன. பயோமெட்ரிக் கருவியில் முதலில் ஆங்கிலம் மட்டும் இருந்த நிலையில், தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே தபால்துறை தேர்வில் தமிழ் இல்லாததால் சர்ச்சையாகி பிரச்சனை முடிந்த நிலையில் அடுத்த சர்ச்சை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: