சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ரங்கநாயகி தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டதால் சாலையை கடக்கும் பகுதி அகற்றப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் சாலையை கடக்க சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை தாண்டி ஆபத்தான முறையில் வருகிறார்கள். எனவே, திருமங்கலம் பாலம் அருகே பள்ளிக் குழந்தைகள் சாலையைக் கடக்க வசதி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.