சென்னை: “கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை இருக்க தான் செய்யும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில செயற்குழு மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். தமிழக பொறுப்பாளர் பாத்திமா ரோஸ்னா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ யசோதா, மகளிர் அணி துணை தலைவர்கள் கோவை கவிதா, சேலம் சாரதா தேவி உள்பட மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.