சென்னை:மாற்றுத்திறனுடையார் சங்கங்களின் கூட்டு இயக்கத்தை சேர்ந்த ஜான்சிராணி மற்றும் நிர்வாகிகள் சென்னையில் நேற்று கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தர வேண்டியது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கடமை. ஆனால் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் மகேஷ்வரி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயகுமார் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரை சந்திக்க சென்றால் பார்க்க அனுமதிப்பதில்லை. அதற்கு பதில் கோரிக்கை மனுவுடன் வந்த மாற்றுத்திறனாளிகள் விரட்ட போலீசை அழைக்கின்றனர்.