பேரையூர்: தமிழகம் முழுவதும் 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. லேப்டாப் வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தங்களுக்கு லேப்டாப் வழங்கப்படாததால், எம்எல்ஏவை முற்றுகையிடுவதற்காக, முன்னாள் மாணவர்கள் காத்திருந்தனர். இதையறிந்த எம்எல்ஏ நீதிபதி, எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும் லேப்டாப் வழங்கி சென்று விட்டார்.