கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு:இந்திய அரசால் வழங்கப்படும் 2019ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதிற்கு, துணிவு மற்றும் வீரதீர சாகச செயல்கள் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல  அலுவலகத்தை அணுகி, உரிய படிவம் பெற்று சரியான ஆவணங்களுடன் வருகிற 8ம் தேதி மாலைக்குள் விண்ணப்பம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: