சென்னை: கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்புகளை கட்டும் குடிசை மாற்று வாரிய திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவார கிராமங்களில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 4780 வீடுகளை கட்ட குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், ஆலந்துரை, காளிமங்கலம் பகுதிகளில் 600 வீடுகள், தென்கரை கிராமத்தில் 1,500 வீடுகள், பேரூர் செட்டிபாளையத்தில் 2,500 வீடுகள், மற்றும் பத்தனவயலில் 70 வீடுகளும் கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு தடை விதிக்க கோரி, வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், இத்திட்டத்தின் மூலம், குடிசை மாற்று வாரியம் வீடுகள் அமைக்கும் பகுதியானது, நிலச்சரிவு அதிகம் ஏற்படும் மற்றும் விலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும்.