கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோபாலபுரம் பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோபாலபுரம் பகுதியில் கோழிக்கடை என்ற பெயரில் சட்டவிரோதமாக மது விற்பனையானது நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதி பொள்ளாச்சி மற்றும் தமிழக கேரள எல்லையில் இருக்க கூடிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதை தொடர்ந்து இந்த பகுதியில் கோழிக்கடை என்ற பெயரில் மூடிய பார் ஒன்று அமைக்கப்பட்டு சட்டவிரோதமான மது விற்பனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை இருக்க கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் இந்த இடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து இதுவொரு எல்லை பகுதி என்பதால் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.