பாட்னா: ‘பீகாரில் பருவமழை தொடங்கி உள்ளதால் மூளைக்காய்ச்சல் நோய் பாதித்ததாக புதிதாக எந்த நோயாளியும் வரவில்லை’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் மூளை காய்ச்சல் நோயால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 1ம் தேதி முதல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 600 குழந்தைகள், சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 149 பேர் பலியாகினர். முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 430 சிறுவர்கள் மூளைகாய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 109 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பீகாரில் பருவமழை தொடங்கியது.