புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, ஏரி, குளங்கள் தூர்வாருவதற்கும், நகரம் தூய்மையாக இருப்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும், `பசுமை புதுச்சேரி’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்து ஏரி, குளங்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வேல்ராம்பட்டு ஏரிக்கு சென்ற அவர், மரக்கன்று நட்டார்.
இதனை தொடர்ந்து, இன்று காலை கவர்னர் கிரண்பேடி, கனகன் ஏரிக்கு சென்று ஆய்வு செய்தார். இதற்காக அவர், ராஜ்நிவாசில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்தார். அங்கு 2 வருடத்திற்கு முன்பு சாக்கடை மற்றும் மருத்துவக் கழிவு நீர் கலந்து அசுத்தமாக இருந்தது, தற்போது அது சரி செய்யப்பட்டு,