கார் மீது கன்டெய்னர் லாரி மோதி தாய், தந்தை, மகன் பலி

சென்னை: பம்மல் எல்ஐசி காலனி, 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாய்சந்திரசேகர் (40). சென்னையில் உள்ள நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜென்ட். இவரது மனைவி புஷ்கலா(35). இவர், அடையாறு டைட்டில் பார்க்கில் உள்ள நிறுவன ஊழியர். இவர்களது மகன்கள் கைலாஷ் (9), தருண் கிருஷ்ணா (3).

இவர்கள் அனைவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை சாய்சந்திரசேகர் ஓட்டினார். திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் அருகே வரும்போது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில், சாய்சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

படுகாயமடைந்த அவரது மனைவி புஷ்கலா, மகன்கள் கைலாஷ், தருண்கிருஷ்ணா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்கலா(35), தருண்கிருஷ்ணா (3) ஆகியோர் இறந்தனர். சிறுவன் கைலாஷுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: