இமாச்சலத்தில் பஸ் விபத்து பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பன்ஞார் பகுதியில் இருந்து கடகுஷானி நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் சென்றது. அதில், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், பேருந்தில் இடமின்றி பலர் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தபடி பயணம் செய்தனர். தோத் மோர் அருகே பேருந்து வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 25 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களி–்ல பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை  நேற்று 44 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: