புதுடெல்லி: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை, ‘பிரிட்டீஷ் ஹெரால்டு’ பத்திரிகை வாசகர்கள் தேர்வு செய்துள்ளனர்.இங்கிலாந்தில் வெளியாகும் புகழ் பெற்ற ‘பிரிட்டிஷ் ஹெரால்டு’ பத்திரிகை, 2019ம் ஆண்டின் உலகின் மிக வாய்ந்த தலைவர் யார் என்பது குறித்து வாசகர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகின் பிரபலமான 25 தலைவர்கள், பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடியை வாசகர்கள் தேர்வு செயதுள்ளனர். கருத்து கணிப்பை தொடர்ந்து நடத்தப்பட்ட ஒட்டெடுப்பில் மோடிக்கு 30.9 சதவீத ஓட்டுகள் கிடைத்து, முதலிடத்தை பிடித்துள்ளார்.