வருண பகவான் கருணை காட்டும் வரை காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முடியாது: கர்நாடகா அமைச்சர் பேட்டி

பெங்களூரு: ‘‘வருண பகவான் கருணை காட்டும் வரை காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முடியாது,’’ என கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கூறினார்.கர்நாடக மாநில நீர்ப் பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் ஹுப்பள்ளியில் நேற்று அளித்த பேட்டி:  கடந்த வருடம் இதே நாளில் காவிரி அணையில் 48 டிஎம்சி தண்ணீர் இருந்தது. அதே நேரம் தற்போது அணைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட வரவில்லை. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை  தொடங்கியிருப்பதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வருண பகவான், கருணை வைத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு காணமுடியும். அதுவரை இதற்கு தீர்வு காண முடியாது. காவிரி அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே நாம் திறந்து விட முடியும். எதிர்பார்க்கும் மழை அளவு  இல்லை என்பதால் கர்நாடகா., தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.  கர்நாடகா கூட்டணி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்பது உறுதி.

Related Stories: