கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன். இவர் கடந்த மே மாதம் 22ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம், லாட்டரி சீட்டு விற்பனை வழக்கில் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 70 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய பணத்தை சரவணன், இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நடராஜனை கைது செய்தனர். இதனைதொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.