சென்னை: மக்களவை தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பாஜ கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் மத்தியில் ஆளும் பாஜகவாலும், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவாலும் ஒன்னும் செய்ய முடியவில்லை. தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டும் போராடி வெற்றி பெற்றார்.