அமைச்சர் வீடுகளுக்கு லாரிகளில் தண்ணீர் சப்ளை: ஓபிஎஸ் பதில் அளிக்க மறுப்பு

சென்னை: அமைச்சர் வீடுகளுக்கு லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்வது தொடர்பான கேள்விக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பதில் அளிக்க மறுத்துவிட்டார். சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதற்கிடையில் சென்னையில் உள்ள அமைச்சர்களின் வீடுகளுக்கு லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் லாரிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை அவர்கள் குளிக்க, கை, கால், கழுவ, துணி வைக்க, மாடுகளை குளிப்பாட்ட உள்ளிட்டவற்றிக்கு பயன்படுத்தி வருதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் அல்லாடும் நிலையில் அமைச்சர்கள் இவ்வாறு குடிநீரை துணி துவைக்க வீணாக்கி கொண்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். ஆனால் இந்த கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் துணை முதல்வர் ஓபிஎஸ் சென்றுவிட்டார்.

Related Stories: