சென்னை: நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் (ஜூன்-23) நடைபெறவிருந்தது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான அணியும், பாக்கியராஜ் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், சங்க உறுப்பினர்கள் பட்டியலில் பலர் நீக்கப்பட்டது குறித்து வந்த புகார்களை பரிசீலித்த தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் ஜூன் 23ல் நடக்க இருந்த தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டிருந்தார்.