லக்னோ: லக்னோவில் வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பாரபங்கியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு 29 பேர் வேனில் லக்னோவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். லக்னோவில், இந்திரா கால்வாய் அருகே சென்றபோது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது.