ஹிமாசலப் பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.