மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் வாகனங்களில் அதிகளவு லோடு ஏற்றி செல்லுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. மணல், ஜல்லி, கருங்கற்கள், செங்கல், மரத்தடிகள் என பலவகையான லோடுகளையும் விதிமுறை மீறி அதிக பாரம் ஏற்றி கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதோடு, சாலைகளும் பழுதடைந்து வருகின்றன. இதுபோல குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் வைக்கோல் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது வைக்கோலுக்கு கேரளாவில் நல்ல கிராக்கி உள்ளது. இந்த வைக்கோல் ேலாடுகளை பகலில் கொண்டு சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் இரவு நேரங்களில் வைக்கோல்கள் கொண்டு செல்லப்படுகின்றன.