சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த 46 வயதான அஜித்குமார் தற்போது சாலிகிராமத்தில் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு 27 வயதான தேவிகா என்ற மனைவியும் 6 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் வளசரவாக்கம் போலீசில் தேவிகா தனது கணவன் மீது புகார் ஒன்றினை அளித்தார். அதில் அஜித்குமாருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பதாகவும் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து 1998ஆம் ஆண்டில் கேரளாவில் ஜோதி என்ற பெண்ணையும் 2001ஆம் ஆண்டில் டெலிலா என்ற பெண்ணையும் அஜித்குமார் திருமணம் செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.