சென்னையில் உள்ள நகைக்கடையில் 1 கிலோ தங்க நகைகள் திருட்டு: தலைமறைவான ஊழியருக்கு காவல் துறையினர் வலைவீச்சு

சென்னை: நகை திருட்டானது எங்கும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் உள்ள நகைக்கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் களவுபோயுள்ளன.  சென்னையில் உள்ள நகைக்கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருடு போனதாக கடை உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து தண்டையார்பேட்டையை சேர்ந்த ராம்லால் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு ராம்லால் தனது நகை கடையில் உள்ள நகைகளின் பட்டியலை சரி பார்த்ததாகவும், அதில் ஒரு கிலோ தங்க நகைகள் காணாமல் போயிருப்பதை உணர்ந்துள்ளார்.

இந்நிலையில் தன் கடையில் வேலை பார்த்த இந்தர்ஷாந் மற்றும் சுனில் ஆகிய இருவர் மீதும் ராம்லால்லிற்கு சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் அதில் தனது கடையில் வேலை செய்த இருவரும் சிறிது சிறிதாக நகைகளை திருடி இருக்கலாம் என சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: