சென்னை: நகை திருட்டானது எங்கும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் உள்ள நகைக்கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் களவுபோயுள்ளன. சென்னையில் உள்ள நகைக்கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருடு போனதாக கடை உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து தண்டையார்பேட்டையை சேர்ந்த ராம்லால் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு ராம்லால் தனது நகை கடையில் உள்ள நகைகளின் பட்டியலை சரி பார்த்ததாகவும், அதில் ஒரு கிலோ தங்க நகைகள் காணாமல் போயிருப்பதை உணர்ந்துள்ளார்.