சென்னை: யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘கூர்கா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது: இன்றைக்கு தண்ணீர், பிளாட்டினம், தங்கத்துக்கு ஈடான ஒரு பொருளாக மாறிவிட்டது. அரை பக்கெட் குடிநீர் கிடைக்காமல் அரைநாள் நான் அவதிப்பட்டேன். தண்ணீர் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக இருக்கிறது. இதற்கு காரணம் நாம்தான். நீரை சேமிக்காமல் விட்டது நமது தவறுதான். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எல்லோரும் இலையில் சாப்பிடுங்கள், தட்டு கழுவும் தண்ணீர் மிச்சமாகும். தினம் ஒரு ஆடை அணியாமல் வாரத்துக்கு 2 ஆடை அணியுங்கள், சலவை செய்யும் தண்ணீர் மிச்சமாகும்.