கோவை: கோவை மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி ஜீவா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 60 அடி ரோட்டில் கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக 252 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளுக்கு மின் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கு வசிப்போருக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கீரணத்தம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, அங்கு வீடும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், இப்பகுதி மக்கள் அங்கு செல்ல மறுத்து, தொடர்ந்து இங்கேயே குடியிருந்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் 90 வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர்.