உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 19ல் இசை போட்டி: சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி

சென்னை: உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 19 காலை 10 மணிக்கு சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் போட்டி நடைபெறவுள்ளது. 15 முதல் 30 வயத்துக்குட்பட்டோருக்கு தமிழிசை,கிராமிய பாடல், முதன்மை,தாள கருவியிசை பிரிவில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000, 2ம் பரிசாக ரூ.2,000 3ம் பரிசாக ரூ, 1,000 வழங்கப்படவுள்ளது. இசைப்போட்டிகள் குறித்த விவரங்களை அரசு இசைக் கல்லூரியின் தொலைபேசி எண் 044-24937217 ல் தெரிந்துக்கொள்ளலாம்.

Related Stories: