டெல்லி: ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். இரண்டாவது ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், ஒரு நாடு, ஒரு தேர்தல் என்கிற அடிப்படையில் ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ஜூன் 19-ம் தேதி நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.