புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 28 வகையான பொருட்களுக்கு, இந்தியாவில் சுங்க வரி உயர்த்தப்பட்டது. இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு அமெரிக்க 25 விழுக்காடு வரையில் வரிகளை உயர்த்தியது. இதற்கு பதிலடியாக, இந்தியாவும், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தி கடந்தாண்டு அறிவித்தது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையால், அதனை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் இந்தியா, வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பு, இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது.