கடலூர் : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இளைஞர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அண்ணப்பாலம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி இளைஞர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் அங்கு விரைந்து வந்த போலீசார் இளைஞர்களை கைது செய்தனர்.