சென்னையில் இன்று சன் சிங்கர் இசை நிகழ்ச்சி குரல் தேர்வு: 14 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம்

சென்னை: சன் டி.வி.யில் பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ள சீனியர்களுக்கான சன் சிங்கர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க நேர்முகக் குரல் தேர்வு சென்னையில் இன்று நடக்கிறது. 14 வயதுக்கு மேற்பட்டோர், தனியாகவோ, ஜோடியாகவோ அல்லது இசைக்குழுவாகவோ இந்த தேர்வில் பங்கேற்கலாம். சன் சிங்கர் இசை நிகழ்ச்சி சன் டி.வி. நேயர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஒன்று. கடந்த 7 சீசன்களாக நடந்த சன் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் இசை திறமையை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது உங்கள் சன் டி.வி.

இதன் தொடர்ச்சியாக, 14 வயதுக்கு மேற்பட்டோரின் இசைத் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சன் சிங்கர் சீசன்-8 ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான நேர்முகக் குரல் தேர்வு சென்னையில் இன்று நடக்கிறது. சென்னை, மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் மேல் நிலைப்பள்ளி, மான்போர்ட் இன்டோர் ஸ்டேடியத்தில் காலை 8 மணி முதல் நேர்முகக் குரல் தேர்வு நடக்கிறது. 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியாகவோ, இருவராகவோ அல்லது இசைக்குழுவாகவோ நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

Related Stories: