விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி (69). இவர் கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் ராதாமணி உயிரிழந்தார். மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே கலிஞ்சிக்குப்பத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.