நெல்லை : மின்சாரம், மரங்கள் இரண்டுமே அத்தியாவசிய தேவையாக உள்ளன. ஆனால் சாலைகளில் எடுத்துச் செல்லப்படும் மின்பாதைகளுக்கு மரங்களின் வளர்ச்சி பெறும் இடையூறாக உள்ளது. இதனால் மின்கம்பிகளை தாண்டி படர்ந்து வளர்கின்றன. அதே நேரத்தில் மரங்களின் தேவை இன்றைய நிலையில் மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்டது. மாநகர பகுதிகளில் பிரதான அகல சாலைகள் உள்ள இடங்களில் மரங்கள் பாதிப்பது அரிதாகிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள் என அரசு கூறினாலும் பலர் இதை பின்பற்றுவதில்லை. சிலர் பின்பற்றி வீட்டிலும் வீட்டின் முன் உள்ள சாலையோரங்களிலும் மரங்களை வளர்த்தால் அவை குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளரும் போது மின் பாதைகள் செல்வதற்கு இடையூறாக மாறுகிறது. இது காற்று, மழைக்காலங்களில் தேவையற்ற விபரீதங்களை ஏற்படுத்துகிறது. சற்று கனமான மரக்கிளைகள் அதிவேக காற்றில் முறிந்து விழும் போது மின்கம்பிகளும் அறுந்து விழுகின்றன.