ஓசூர் : ஓசூரில் தண்டு பகுதியில் குலை தள்ளிய வாழையை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஓசூர் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமக்கா. இவர் தனது வீட்டிற்கு அருகில் வாழை நட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில், வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த ஒரு மரத்தின் தண்டு பகுதியிலிருந்து குலை தள்ளியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அந்த மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.